சென்னை: ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை உடனே நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதன் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ. 7லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால்தான் காவலர் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.